நான் ப்ரமித்து நின்று பேரன்பின்


134.   I stand bewildered with wonder.      (244)

1.         நான் ப்ரமித்து நின்று பேரன்பின்
                        ப்ரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்;
            என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம்
                        சம்பூரணமாய் அடைந்தேன்.

பல்லவி

                        மா தூய உதிரத்தால்
                                    என் பாவம் நீங்கக் கண்டேன்;
                        யேசையரின் ரட்சிப்பினால்
                                    நான் ஆறுதல் கண்டடைந்தேன்

2.         முன்னாளில் இவ்வாறுதல் காண
                        ஓயாமல் ப்ரயாசைப்பட்டேன்;
            வீண் முயற்சி நீங்கின போதோ
                        என் மீட்பரால் அருள் பெற்றேன்.

3.         தம் கரத்தை என் மீதில் வைத்து
                        'நீ சொஸ்தமாவாய்' என்றனர்;
            நான் அவரின் வஸ்திரம் தொட,
                        ஆரோக்கியம் அருளினார்.

4.         எந்நேரமும் புண்ணியநாதர்
                        என் பக்கத்தில் விளங்குவார்;
            தம்முகத்தின் அருள் பிரகாசம்
                        என்பேரில் வீசச் செய்வார்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு