இதோ அடியேனிருக்கிறேன்


15. (268)      அடியேன் இருக்கிறேன்

கெதாரகௌளம்                                                ஆதிதாளம்
பல்லவி
            இதோ! அடியேனிருக்கிறேன்,-என்னை
                        அனுப்பும்,
            ஏசுவே, இப்போதே போகிறேன்.

அனுபல்லவி
            இதோ! போகிறேன் நாதனே, இப்புவியில் நீர் எனக்கே
            எந்த இடம் காண்பித்தாலும் உந்தன் சித்தம் செய்திடுவேன்;-

சரணங்கள்
1.         மலைகள், பள்ளங்கள் தாண்டியோ,-மா கஷ்டமான
            வனங்கள், கடல்கள் கடந்தோ,
            தொலை தூரமாகச் சென்றோ, சுவிசேஷம் கூறும்படிச்
            சொல்லும்போது நீர் ஏசுவே, துரிதமாய்ச் சென்றிடுவேன்; - இதோ

2.         வறியர் அறிவீனருக்கும்,-மா துஷ்டருக்கும்,
            வணங்காக் கழுத்துள்ளோருக்கும்,
            அறிவி என் நாமம் என்று அடியேனை ஏவும்போது
            சரியென்றிணங்கி எல்லா சனத்தையும் தேடிப் போவேன்; - இதோ

3.         வயல் நிலங்கள் இப்பொழுதே-அறுப்புக்கேற்க
            வளமாய் விளைந்திருக்குதே;
            நயமான வேலையாட்கள் ஞாலமதில் தேடுகின்றீர்;
            பயமின்றி என்னை உந்தன் பாதமதில் ஒப்புவித்தேன். - இதோ

4.         உலக முடிவு மட்டுமே-சகல நாளும்
            உங்களோடிருப்பேன் என்றீரே;
            மலைமேலே நீர் கொடுத்த மாபெரிய கட்டளையைத்
            தலைமேலே கொண்டிப்போது தரணியில் ஏகிடுவேன். - இதோ

- வே. ச.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு