உம்மோடு இயேசுவே சஞ்சரிப்பேன்


130.   Walking with Thee my God!    (311)

1.         உம்மோடு, யேசுவே!
                        சஞ்சரிப்பேன்;
            நித்தமும் நேசராய்
                        விளங்குமேன்.
            ஸ்நேகம் பாராட்டினீர்
            சீராக்கி இரட்சித்தீர்.
                        காப்பாற்றுமேன்! காப்பாற்றுமேன்!

2.         உம்மோடு, பிதாவே!
                        சஞ்சரிப்பேன்.
            கைதாங்கி, பாதையில்
                        நடத்துமேன்.
            திவ்விய சம்பாஷணை,
            தூய சற்போதனை
                        கேட்டேசெல்வேன், கேட்டேசெல்வேன்.

3.         உன்னத ஸ்தலத்தில்
                        சஞ்சரிப்பேன்.
            உம்மை எந்நேரமும்
                        தரிசிப்பேன்.
            தீங்கணு காமலும்
            மேகம் தோன்றாமலும்.
                        வாசஞ்செய்வேன், வாசஞ்செய்வேன்.

4.         உம்மோடு தாழ்மையாய்
                        சஞ்சரிப்பேன்.
            அஞ்சாமல், அன்பனாய்
                        அண்டிக் கொள்ளுவேன்.
            இஷ்டனோ டிஷ்டனாய்,
            அந்யோந்ய நேசமாய்ச்
                        சம்பாஷிப்பேன், சம்பாஷிப்பேன்.

5.         அப்பாலே மோட்சத்தில்
                        சஞ்சரிப்பேன்;
            கண்ணார நோக்கியே
                        ஆனந்திப்பேன்.
            பேரின்ப சுகமும்,
            மாசற்ற ஸ்பாவமும்
                        கண்டடைவேன்! கண்டடைவேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு