அருட் பெரும் சோதி நீ அடியேனை


28. (13 Y)    உன் திருவரம் தருவாயே

சுத்தசாவேரி                                                             ஆதிதாளம்
பல்லவி
            அருட் பெரும் சோதி, நீ அடியேனை மீட்டே-உன்
            திருவரம் தருவாயே.

அனுபல்லவி
                   மருள் கொண்டு மாய்கிறேன், மானிலந் தன்னிலே
                   அருள் தந்து காப்பாயே. - அருட்

சரணங்கள்

1.         அல்லல் வினை யகற்றும் அரிய குமாரன் நீ,
            தொல்லுலகை ரட்சித்த கொல்கதா வீரன் நீ,
            செல்வம் அளிக்கும் நல்ல தெய்வ குபேரன் நீ,
            புல்லன் எனக்கு வாய்த்த சொல்லரிய பொக்கிஷம் நீ. - அருட்

2.         வன் நெஞ்சேனை இழுத்த தீன தயாளன் நீ,
            புன் செயலை அளிக்கும் இன்சொல் இறைவன் நீ,
            மன் பதையை ரட்சித்த மாண்புடை யேசு நீ,
            என் மனதுக்குகந்த அன்பின் சொரூபம் நீ. - அருட்

3.         இத்தரையோர்க்கு வேண்டும் சுத்த சுவிசேஷம் நீ,
            புத்துயிரை அளிக்கும் நித்திய சீவன் நீ,
            முத்தி நெறியைக் காட்டும் மூலப் பரப்பொருள் நீ,
            பித்தன் எனக்கு வாய்த்த சித்த சிகாமணி நீ. - அருட்

- ஈ. த. யே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு