ஏசையா பிளவுண்ட மலையே


13. (194)      ஏசையா, பிளவுண்ட மலையே

சங்கராபரணம்                                                         ஏகராளம்
பல்லவி
            ஏசையா, பிளவுண்ட மலையே,
            மோசநாளில் உன்னில் மறைவேனே.

சரணங்கள்
1.         மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா;
            தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் நீருமே. - ஏசையா

2.         இகத்தில் என்னென் செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,
            மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவ ரோகமே;-ஏசையா

3.         பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும்,
            நேரஸ்தரின்பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; - ஏசையா

4.         வெறுங் கையோடோடி வந்து, வினை நாசன் பேரருள் கெஞ்சித்
            திருச்சிலுவை தஞ்சம் புகுந்து,-தியங்கி அணைத்தே நிற்பேன்; - ஏசையா

5.         அருளில்லாதோன் ஆனாலும், அபயமுன்றன் நீதிக்கே!
            கருணை ஊற்றில் கழுவமாட்டாயோ?-கழுவாயாகில் சாவேனே; - ஏசையா

6.         ஜீவனோடே தங்கினாலும், தெளிகண் சாவில் மங்கிலும்,
            தேவாசனமுன் அஞ்சி நிற்கத்-தேவலோக மேறிலும், - ஏசையா
- ர. சா. சா.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு