இரட்சகா கண்ணோக்குமேன்


129.   Saviour! more than life to me (266)

1.         ரக்ஷகா! கண்ணோக்குமேன்!
            உம்மை அண்டிப் பற்றிப் பிடித்தேன்
            கூடவைத்துக் கொள்ளுவீர்.
            திருரத்தம் நித்தம் தெளிப்பீர்.

பல்லவி

                        எந்நாள் நேரமும்
                        சுத்தமாக்கிக் கொண்டிரும்;
                        அன்பினாலே இழுப்பீர்,
                        நித்தம் கிட்டச் சேர்த்து அணைப்பீர்.

2.         மோசமின்றி தினமும்
            என்னை மெல்ல மெல்ல நடத்தும்.
            நம்பிப் பின்னே செல்லுவேன்;
            வழிவிட்டுத் தப்பித் தவறேன்.

3.         ஜீவன் உள்ளவரைக்கும்,
            மோட்சானந்தம் பெறுமளவும்,
            பற்றிக்கொண்டு வருவேன்.
            உம்மை மேலும் மேலும் நேசிப்பேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு