ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய்


1. (14)          ஈசனை ஆவியில் ஆராதிக்கவேணுமே

பைரவி                                                                   சாபுதாளம்

பல்லவி

            ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய்
            ஆராதிக்க வேணுமே!

அனுபல்லவி
                        ஜீவருக் கெல்லாம் அதீதமாக நின்ற
                        சித்விலாசன் சருவகாரணன் அந்த - ஆவி

சரணங்கள் 
1.         எங்குமு றைபவன், எவ்வுயிர்க் குமீசன்,
            இதயக் கண்ணால்மட்டும் காணத்த கும்விகாசன்,
            இங்குமங் குமென்ன வில்லாமல் எவருக்கும்
            எந்தவி டத்திலும் இறைவனா கவமர்ந்த - ஆதி

2.         சத்து சித்தானந்த மான தனிமுதல்,
            சார்ந்தடி பணிபவர்க் கழியாத மெய்ப்பொருள்,
            ஓங்கிய அன்பினால் தொழவேண்டுமே, அந்த - ஆவி

- ல.ஈ.ஸ்



Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு