ஓடிவா ஜனமே கிறிஸ்து வண்டைக்


கிறிஸ்துவண்டைக்கு ஓடிவா

291. (18) புன்னாகவராளி                                 ஆதிதாளம்

பல்லவி
                        ஓடிவா, ஜனமே;-கிறிஸ்து வண்டைக்
                        கோடிவா, ஜனமே;-பண்டிகை கொண்
                        டாடிவா, ஜனமே;-அவர் பாதத்தைத்
                        தேடிவா, ஜனமே.

அனுபல்லவி
            நீடு சமர்[1] புரி கோடி அலகையை
            நிக்ரகித்து[2] வாள் பிடித்த உக்ர மனுவேலனைக் கண்-டு-ஓடி

சரணங்கள்

1.         நேர்ந்தடிகள் துதித்து,-நித்ய ஜெபத்தில்
            நீதித் தவங்கள் கதித்து,
            சேர்ந்தருளை மதித்து,-சோதிக்கச் செய்த
            தீய சர்ப்பத்தை மிதித்து,-அநித்தியமான
            ஜெக ஜாலத்தைப் பணித்து, அகத் தாக்ரமத்தை விட்டு,
            திட்டமாக நின்று, பத்துக் கற்பனைப் படியே சென்று,
            தேவ துந்துமி முழங்க,-சங் கீதங்களும்,
            பா வினங்களும் விளங்க,-அதன் ஒலியால்
            அண்டமும் குலுங்க, பர மண்டலங்களும் இலங்க,
            ஆராதனைகள் செய்து, சீராய் நடந்துகொண்டு,
            அரிய பரம் பொருள் ஒருவனை நெஞ்சகம்
            உருகி நடம் செய்து, பெருகிய அன்புடன். - ஓடி

2.         ஞானஸ்நானம் பெற்றுச்-சுருதி நூலின்
            மேன்மைச் சாஸ்திரம் கற்று,
            ஈனப் பாவிகள் கற்று,-மாயங்கள், அக்கி
            யானக் கிரயைகள் அற்று,-மாங்கிஷத்தின்
            இருளாந்த காரம் நீங்கி, அருளானந்தங்கள் ஓங்கி,
            இஷ்டமாய் நடந் தெலார்க்கும் துஷ்டத்தனப் பொல்லார்க்கும்
            யேசு நேசத்தைச் சூட்டி,-மனோகரத்தால்
            பாசத் தன்பு பாராட்டிக்,-கவனமாக
            அந்தி சந்தியும் ஜெபங்கள், மந்திரங்களைப் படித்து,
            ஆண்டாண்டெமைக் கரிசித்து, மீண்டாண்டானுக்கிரகித்த
            அறிவுகள் இங்கித கிருபை விளங்கிய
            திரிமுதலின் சரண் உறுதியுடன் தொழ. - ஓடி

- வே. சாஸ்திரியார்


[1] சங்கீதம்
[2] உயர்ந்த

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு