என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்


எனக்கென்ன குறைவுண்டு?

208. (246) பியாக்                                          ஆதி தாளம்

பல்லவி
            என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
            கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே.

சரணங்கள்
 1.         என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,
            என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்;
            விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ் சிறந்தோர்,
            மித்திரனே, சுகபத்திர மருளும். - என்

2.         பாபமோ, மரணமோ, நரகமோ, பேயோ,
            பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர்,
            சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்;
            சஞ்சலமினியேன்? நெஞ்சமே, மகிழாய். - என்

3.         ஆசிசெய்திடுவார், அருள்மிக அளிப்பார்,
            அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்;
            மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்;
            மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும். - என்

4.         கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்,
            கடைசிமட்டுங் கைவிடா திருப்பார்;
            பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்,
            பரம பதவியினுள் என்றனை எடுப்பார் - என்

5.         போனது போகட்டும், புவிவசை பேசட்டும்,
            பொல்லான் அம்புக ளெய்திடட்டும்,
            ஆனது ஆகட்டும், அருள்மழை பெய்திடும்,
            அன்புமிகும் பேரின்ப மெனக்கருள் - என்

- ஞா. சாமுவேல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு