வாரீரோ வினை தீரீரோ எனைக்


வாரீரோ வினை திரீரோ

207. (210) பியாக்                          தாளம்: ஆதி தாளம்.

பல்லவி 
                   வாரீரோ? வினை தீரீரோ? எனைக்
                   காரீரோ? ஜீவன் தாரீரோ, யேசு

அனுபல்லவி

            வாரேனென்றீர், வரந் தாரேனென்றீர், சுவாமீ;
            பாரினிலே யெனக்கு யாருமில்லை, துணைக்கு. - வாரீரோ

சரணங்கள் 
1.         தேனே, மரிமகனே, தேடி மறுகுங்[1] கோனே,
            சேனைகளின் சீமோனே, சிந்தை கலங்கி நானே
            கானகமே மேவும் மானது போலானேன்;
            வானகம் போன தேவா, ஏனோ வரத் தாமதம்? - வாரீரோ

2.         அட்ட திக்கெங்கு மென்னைத் துட்டப் பாசாசுக் கூட்டம்
            இட்டப் படுத்தவல்லோ கிட்ட வளையது, பார்
            அடுத்தாலோ, அம்பைத் தொடுத்தாலோ என்ன!
            அடுபடையாக நின்று தடு படை[2] செய்வீர், யேசு, - வாரீரோ

3.         காணாத ஆட்டைத் தேடிக் காடெங்கும் சென்ற கோன் நீர்
            கண்டு பிடித்த ஆட்டைக் கொண்டு தொழுவஞ் சேர்க்கக்
            கருத்துடனே மிக உரித்துடனே இரு
            கரத்திலேந்தி வலப் புறத்தில் வைப்பீர் திண்ணம். - வாரீரோ

4.         வீடு எனக்குச் செய்ய மேலோகம் போன தேவா,
            கூட இருத்தி வைக்கக் கூப்பிட வாறேனென்றீர்;
            கொண்டு வருவீர் முடி, நின்று வருவீர் நொடி;
            கண்டு மகிழ்வேன், கூடி நின்று புகழ்வேன் கெடி. - வாரீரோ

- மு. தேவசகாயம்


[1] மயங்கும்
[2] மறுக்கிற ஆயுதம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு