தேவ வசனத்தையே நீராவலுடன்


தேவ வசனத்தையே

248. (59 L.) உசேனி                                       ரூபக தாளம்

பல்லவி
          தேவ வசனத்தையே நீராவலுடன் கேட்டதனின்
          செய்கைக்காரருமாகுங்களேன் செவ்வையாவே. - தேவ

சரணங்கள்
1.         செய்கையற்ற கேள்விக்காரன் மெய்யாய்த் தன்னிலை மறந்தான்
            ஐயோ அவன் நிர்ப்பாக்கியனே, அருளில்லானே. - தேவ

2.         பூரண விடுதலையின் ஆரணந்தன்னில் நிலைத்துத்
            தாரணியில் நற்செய்கையுள்ளோன் தகுபாக்கியனே. - தேவ

3.         தேவமகிமை நவிலும் நாவையடக்காமலே தான்
            தீங்குற இதயம் எத்துவோன், தெய்வபத்தி யவம். - தேவ

4.         அநாதர் விதவைகளை ஆதரித்துல காற்கறை
            அணுகாது காப்பதே பத்தி அம்பர தந்தை முன். - தேவ

5.         கிருபை விண்ணப்பங்களின் திரு ஆவியை யூற்றுவன்
            பிதாவை யாவியுண்மையிலும் சதா பணிவீர். - தேவ

- ல. யோசுவர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு