துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித்


பங்கமின்றித் தங்குவான்

228. (257) சங்கராபரணம்                                ஆதி தாளம்

பல்லவி

          துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்

அனுபல்லவி

            கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால். - துங்

சரணங்கள்

1.         வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால்,
            மூடி உனைக் காப்பரே, ஒர் மோசமின்றிச் சேர்ப்பரே. - துங்

2.         பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்
            சிக்கென வீழ்ந்தாலுமே, தீங்குனை அண்டாதுகாண். - துங்

3.         கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்;
            அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவர் உன் தாபரம். - துங்

4.         தீங்குனை அண்டாமலும், தீனங்கள் தீண்டாமலும்,
            பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே. - துங்

5.         பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல்,
            தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே. - துங்

6.         நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே,
            வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள். - துங்

- த. யோசேப்பு

Comments

  1. Who is த. யோசேப்பு?

    ReplyDelete
    Replies
    1. பாடல் எழுதியவரின் பெயர்
      த. யோசேப்பு அவரின் ஊர் நெய்யூர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு