எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோ


எப்போது காண்பேனோ?

282. (349) முகாரி                                          ரூபகதாளம்

பல்லவி

                   எப்போ காண்பேனோ? எப்போ சேர்வேனோ?
                   எது என் சீயோனோ? அதின்னம் எத்தனை தொலையோ?

சரணங்கள்

1.         என் யேசுநாதர்,-என் ஆத்தும மீட்பர்,
            என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை,- எப்

2.         தூதர்கள் கூடிச்-சோபனம் பாடி,
            நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை. - எப்

3.         ஜீவ கிரீடம்,-திவ்விய வாழ்வு,
            பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குண்டாமே. - எப்

4.         துன்பங்கள் மாறும்,-சுகம் வந்து சேரும்;
            இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும். - எப்

5.         உலகத்தின் கவலை-ஒன்றும் செய்யாதே;
            பலவிதத்தொல்லை இராது, அங்கே பாக்கியம் கொள்வேன். - எப்

6.         கைகளில் எடுத்தேன்-கண்ணீரைத் துடைப்பார்;
            ஐயன் கிறிஸ்துமேல் கவிபாடி நான் ஆனந்தம் கொள்வேன். - எப்

- பாக்கியநாதன் தாவீது

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு