என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்


என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்

220. (203) சங்கராபரணம்                               சாபு தாளம்
பல்லவி
            என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்,
            ஏற்றுக் கொள்ளும், யேசுவே.

அனுபல்லவி
            அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று
            சொன்ன வாக்குத்தத்த மல்லாது, இப்போது - என்னை

சரணங்கள்
1.         அந்தகாரத்தி னின்றும், பவப் பேய்
            அடிமைத் தனத்தி னின்றும்
            சொந்த ரத்தக் கிரயத்தால் எனைமீட்ட
            எந்தையே, உந்தனுக்கிதோ! படைக்கிறேன். - என்னை

2.         ஆத்ம சரீரமதை உமக்கு
            ஆதீன மாக்கி வைத்தேன்;
            பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக்
            காத்திருக்கின்றேன்; கருணைசெய், தேவா. - என்னை

3.         நீதியி னாயுதமாய் அவயவம்
            நேர்ந்து விட்டேன் உமக்கு;
            ஜோதி பரிசுத்த ராலய மாகவே
            சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை. - என்னை

- சா. சீமோன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு