தினமே நானுனைத் தேடிப்பணியச்


தினமே நான் உன்னைத் தேடிப் பணிய

209. சுத்தபங்களா                                           ஆதி தாளம்

பல்லவி
                    தினமே நானுனைத் தேடிப்பணியச்
                    செயும்துணையே நித்ய ஏக தெய்வமே.

அனுபல்லவி
             மனநிலை தவறி மருகினேன்[1] நானே.
            மாசிலானே அனுகூலநற் கோனே. - தின

சரணங்கள்
 1.         அருள் நாயகனே, அம்பரத் தீசா,
            ஆதியாய் நின்றபேர் அருள்நிறை பாசா,
            மருள்பவ நாசா, மனுக்குல ராசா,
            மகிமை யடைந்தமா மகத்துவ நேசா! - தின

2.         செத்தேன், எனக்குன் ஜீவன் அளித்தாய்,
            தீயனென் மேல் திருத் தீர்த்தம் தெளித்தாய்,
            முத்தேயென் நன்மைக் காக மரித்தாய்,
            மோதிய தீவினை யாவும் அழித்தாய். - தின

3.         திரளென் பாவங்கள் தீர்த்திட வாராய்,
            தீமை மறந்துநான் சீர்பெறக்கூராய்,
            கரள் குணமாற்றிக் கனிந்தெனைச் சேராய்,
            களிப்புடன் பாடிடக் கறுணைக்கண் பாராய். - தின

- சா. பரமானந்தம்


[1] வந்தேன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு