நித்தம் முயல் மனமே பரி


நித்தம் முயல் மனமே

253. உசேனி                                                  ரூபகதாளம்

பல்லவி

                   நித்தம் முயல்[1] மனமே! பரி
                   சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ.

சரணங்கள்

1.         அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து
            சத்திய வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி! -நித்தம்

2.         அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை
            ஆசையாய்க் கழி நீ, அவரைப்போலாவாய். - நித்தம்

3.         தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி,
            ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய். - நித்தம்

4.         யேசுவே உன்றனை என்றும் நடத்துவார்;
            இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின்செல்லு. - நித்தம்

5.         எந்த எண்ணத்தையும் யேசுவின் கீழ் ஆக்கி,
            உன்றன் உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய். - நித்தம்

6.         மேவும் அன்பினுக்குள் தேவாவி நடத்த
            மேலான வாழ்வுக்குத் தக்கவனாகுவாய். - நித்தம்

- வே. சந்தியாகு


[1] முயற்சி செய்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு