ஆதி யாம் மகா ராசனே எந்த வேளையும்


எந்த வேளையும் அடியனோடிரும்

212. (235) புன்னாகவராளி                                         சாபுதாளம்

பல்லவி

            ஆதி யாம் மகா ராசனே,-எந்த வேளையும்
            அடிய னோடிரும், ஈசனே

அனுபல்லவி

            தீதில்லா சருவேசா, தேசுறும் பிரகாசா,
            பாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால், - ஆதியாம்

சரணங்கள்

1.         பாவி பெலனால், ஐயனே,-நின்றால் என்னைப்
            பகைவர் ஜெயிப்பார், மெய்யனே;
            தேவா, துணை நீர் ஐயனே;-சிறியனிடம்
            சேர்ந்தே வசியும், துய்யனே,
            மேவும் தஞ்சம் எனக்கு வேண்டும், காவலன் நீரே;
            சாவுவரையும் என்னைத் தாங்கி அரவணையும். - ஆதியாம்

2.         இரக்கம் பொழிய வாருமே,-கிருபையாக,
            இறைவா, என்னிடம் சேருமே;
            உருக்கம் நிறைந்த நீருமே;-அனவரதம்
            உந்தம் அருளைத் தாருமே;
            செருக்காய் எம்மீ திகலோர் சேதம் செய்ய நினைக்கும்
            திருக்கை அகற்றி என்னில் தினமும் அருள்புரியும். - ஆதியாம்

- ச. யோசேப்பு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு