சிந்தையுடன் தெய்வாலயந்தனில்


சிந்தனையுடன் தேவாலயந்தனில் சேர்வோம்

290. சஹானா                                                ஆதிதாளம்

பல்லவி

          சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம்,-திரி
          யேகரின் திருத்தாள்[1] போற்றியே களிகூர்வோம்.

அனுபல்லவி
1.         தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம்;-அவர்
            செற்றலர்[2] இடித்துமே சிறந்தவாலயம்;-தமின்
            மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம் - சிந்

2.         கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம்;-எந்தக்
            காலமும் துதிமுழங்கும் கான[3] வாலயம்;-பரி
            சுத்தமாய்த்தனையே காக்கும் துங்க[4] வாலயம் - சிந்

3.         திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம்;-அது
            தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமலாயம்;-தீட்
            டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம். - சிந்

4.         வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம்;-பக்தர்
            மகிமை ஜோதிமய மாகுமாலயம்;-மெய்ஞ்
            ஞானபாக்கியங்கள் பெய்யும் நாதராலாயம். - சிந்

­- ஞா. சாமுவேல்


[1] திருப்பாதங்கள்
[2] பகைவர்
[3] சங்கீதம்
[4] உயர்ந்த

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு