சத்திய வேதத்தைத் தினம் தியானி


சத்திய வேதத்தைத் தினம் தியானி

243. (141) ஹரிகாம்போதி                                        ஆதி தாளம்

பல்லவி
                   சத்திய வேதத்தைத் தினம் தியானி,
                   சகல பேர்க்கும் அதபிமானி.[1]

அனுபல்லவி
            உத்தமஜீவிய வழி காட்டும், உயர்வானுலகில் உனைக்கூட்டும் - சத்திய

சரணங்கள்
1.         வாலிபர் தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுண வாகும்
            பாலகர்க்கினிய பாலும் அதாம்; படிமீ தாத்மபசி தணிக்கும். - சத்திய

2.         சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாம்;
            புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும். - சத்திய

3.         புலைமேவிய[2] மானிட ரிதயம் புனிதம் பெறுதற்கதுமருந்தாம்;
            நிலையா நரர்வாணாள் நிலைக்க நேயகாய கற்பம்[3] அதாம் - சத்திய

4.         கதியின் வழிகாணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது;
            புதிய எருசாலேம்பதிக்குப் போகும் பயணத்துணையும் அது. - சத்திய

5.         மாந்தர் ரக்ஷிப்படையும் வழி வழுத்தும் வேதவார்த்தை அது;
            வேந்தர் அமைச்சர் முதலெவர்க்கும் விதித்த பிரமாணமும் அதுவே. - சத்திய

- மு. சாமுவேல்


[1] அது பெருமைக்குரியது
[2] தீமை சேர்ந்த
[3] மருந்து

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு