வான நகரத்தின் மேன்மையென


வான நகரத்தின் மேன்மையென சொல்லுவோம்

281. (348) காம்போதி                     ஆதிதாளம்

பல்லவி
                    வான நகரத்தின் மேன்மையென சொலுவோம், கன
                    வலன் நலவருக்கருள்.

சரணங்கள்
 1.         பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள்
            பன்னிரு முத்துக்கள் தெரு பொன்னின்மயமே;
            தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும்
            ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான. - வான

2.         அங்குநோய், துன்பம், விசாரம், அக்ரமம், கண்ணீர், தரித்திரம்
            அற்பமு மிருப்பதில்லை, சொற்பமாகிலும்
            பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லை,
            புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம். - வான

3.         அந்நகர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான
            அர்ச்சய உடுப்பு, சிரமானதிற் கிரீடம்
            மன்னவர் போலே அணிந்து மகிமையி னாசனத்தில்
            வாய்மையாக வீற்றிருப்பர்; தூய்மையான அந்த நல் - வான

4.         நேயமுற்பிதாக்கள், தீர்க்கர், நின்மலன் அப்போஸ்தலர்கள்,
            நீதிமான்கள், எல்லவரும் தூதர் நல்லோரும்
            ஓய்வின்றித் தோத்ர கீத உச்சிதத் தொனிமுழக்கி
            உன்னதனைப் போற்றுவார்கள்; பன்னரும் சிறப்பதுள்ள - வான

- ஞா. சாமுவேல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு