அருமையுற நீ இறங்கி அடியனுள


உதவு நதியாக வந்த பெருமானே

224. கேதாரகௌளம்                                       கண்டசாபு தாளம்

திருப்புகழ் 
1.          அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,
            அணுவளவிலாது பங்கம்-அகன்றோடும்;
            அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்த
            அகமுழுதுமே நிறைந்து-வழிந்தோடும்.

2.         திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்
            திவிய வரமாக வந்து-எனதாகும்;
            தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்து
            சிறுமை செயும் 'நான்' மறைந்து-பறந்தோடி.

3.         மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும்
            மலர் முக சந்தோஷ பண்பும்-சுடரா
            மகிமையும் நின்னோடுவந்த எனதிதயமே நிரந்து,[1]
            வளமை வரவே விளைந்து-நிலையாக.

4.         உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து,
            உனதடிமையாய்ப் பரிந்து-எனையாளாய்!
            உனதசுனையாய்ச்[2] சுரந்து அடியருளமே விரிந்து,
            உதவு நதியாக வந்த-பெருமானே!
         
­- நாராயண வாம திலகர் சந்தியாகு


[1] நிறைந்து
[2] உயர்ந்த மலையூற்றாய்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு