நல்லாயன் இயேசு சாமி


நல்லாயன் ஆட்டுக்காய் உயிர் தாறார்

234. (254) பியாகடை                                    ஏகதாளம்

பல்லவி
          நல்லாயன் யேசு சாமி, ராஜன்தாவீதுடை மகவு,-
          ஒரே மகவு, ஆட்டுக்காய் உயிர் தாறார்.

சரணங்கள்
1.         எல்லார்க்கும் பெரியான், எம்பிரான் தம்பிரான்,
            ஏகவஸ்தோரே ஏகோவா,-மா
            தேவ கிறிஸ்து நீ கா, வா, வா. - நல்

2.         மன்னர் மன்னர் கொண்டாடிய நீடிய
            வானப் பரமகு மாரா வோ,-அதி
            ஞானத் திறம் மிகும் வீராவோ. - நல்

3.         விண்ணாடர் முழங்க, மண்ணாடர் விளங்க,
            மேவி வந்தமே சையாவே,-படு
            பாவி சொந்தம் ஏ சையாவே. - நல்

4.         சீராட்டுக் காட்டி எந்தையார், தந்தையார்
            திருக்கடைக் கண்ணால் பார்த்தாரே;-வந்து,
            திரும்பத் திரும்ப எனைச் சேர்த்தாரே. - நல்

5.         ஆட்டைக் கூட்டி ஓர் தொழுவத்தில் அடைப்பார்,
            அரிய நல்ல மேய்ச்சல் கொடுப்பார்,-அன்
            பாகத் தோளினிலே எடுப்பார். - நல்

- வே. சாஸ்திரியார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு