ஓ ஸ்திரீ வித்தேசையா


எம்மைக் கண் பாராயோ?

287. (281) சயிந்தலி.                                                சாபுதாளம்

பல்லவி 
                    ஓ! ஸ்திரீ வித்தேசையா,
                    அன்புகூராய்? துன்பம் தீராயோ?

அனுபல்லவி

            வஸ்தோரே, கிறிஸ்துவேதா, மானுவேலே, யேசுநாதா,
            வந்தெமை க்ருபைக் கண் பாராயோ? - ஓ!

சரணங்கள்

1.         ஆதி மானிடர் புரிந்த பாதகம் தொலைக்க வந்த
            அண்ணலே, உமக் கபயமே!
            ஓ! ஸ்திரீ வித்தேசையா,
            ஆதரித் திரங்க வேண்டுமே. - ஓ!

2.         எத்தனை மனக் கிலேசம்? நித்தமும் சத்துருக்கள் மோசம்;
            எந்தையே கைவிட்டுவிடாதேயும்,
            ஓ! ஸ்திரீ வித்தேசையா,
            எப்படியும் காத்தருள் மெய்யா. - ஓ!

3.         ஆடுகள் சிதறிப்போச்சோ? அன்னியருக் கிஷ்டம் ஆச்சோ?
            பாடுபட்ட பட்சக் கோனாரே,
            ஓ! ஸ்திரீ வித்தேசையா,
            காடுகளில் தேடிப் பாருமேன். - ஓ!

4.         மந்தையை க்ருபை கண் பாரும்; சிந்தையில் துயரம் தீரும்,
            சந்ததம் தொழுவம் சேருமேன்,
            ஓ! ஸ்திரீ வித்தேசையா,
            வந்தனம், உமக்குத் தோத்திரமே! - ஓ!

- வே. சாஸ்திரியார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு