சிந்தனைப் படாதே நெஞ்சமே


சிந்தனைப்படாதே நெஞ்சமே

230. (249) துஜாவந்தி                                    ஆதி தாளம்

பல்லவி

          சிந்தனைப் படாதே, நெஞ்சமே,-உனை ரட்சித்த
          தேவ சுதன் இருக்கிறார்.

அனுபல்லவி
            அந்தியும் சந்தியுமாக ஆர் பகை செய்தாலும் என்ன?
            எந்த வினை வந்தும், மயிர் எண்ணப் பட்டிருக்கையிலே. - சிந்

சரணங்கள்

1.         ஐந்து சிட்டு ரண்டு காச தாக விற்றும் அங்கதில் ஓன்
            றும் தரையி லேவிழாதென் றுத்தமன் உரைத்திருக்க,
            புந்தியில் விசாரமுடன் போக்கிடம் அற்றவர் போல,
            சந்தேகத்தினால் உழன்று, தவித்துத் தவித்து நின்று. - சிந்

2.         சோங்கில்[1] அயர் சீடரின்முன் பாங்குடன் தயவளித்துத்
            தூங்கினோர் உனையும் வந்து தாங்குவார், என வந்தாலும்;
            ஓங்கும் இஸ்றாவேல் ராசன் தூங்கவும் இலையே; சும்மா
            ஏங்கி ஏங்கிச் சஞ்சலம் கொண்டேமாந் தேமாந்து நின்று - சிந்

3.         எத்திசையினும் அடர்ந்த சத்துரு எல்லாம் ஜெயம்கொண்டு
            அத்தனின் வலத்தில் நித்திய துத்தியத் திருந் தரசாள்
            கர்த்தனாம் கிறிஸ்து நாதர் சித்தம தல்லாமல் வீணில்
            தத்தி[2] விழுந் தென்ன வரும்? பித்தது பித்தது கொண்டு. - சிந்

- வே. சாஸ்திரியார்


[1] படகில்
[2] குதித்து

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு