ஆரணத் திரித்துவமே எமை


எமை ஆண்டருள்

211. (234) பியாகடை                                     ரூபக தாளம்

பல்லவி

                 ஆரணத் திரித்துவமே,-எமை
                 ஆண்டருள், மகத்துவமே.

அனுபல்லவி

                        பூரண தேவ பிதா, சுதன், ஆவியே,
                        பொன்னுலகத்தெழும் உன்னதமான
                        போத க்ருபையா பத்ததி[1] நீதிச் சுடரே, நித்திய - ஆரண

சரணங்கள்

1.         அன்றன்றை அப்பத்தைத் தாரும்;-எங்கள்
            ஆபத் தனைத்தையும் தீரும்;
            இன்றும் என்றெங்களைச் சேரும்;-திரு
            இரக்கத்தால் முகம் பாரும்;
            நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும்;
            நம்பரா, கருணாம்பரா,
            ஞானத் தனு மானத்தொளிர்
            மேன்மை திவ்விய பானத்தருள். - ஆரண

2.         மூவர் ஒன்றான யெகோவா,-உயர்
            முக்ய கிருபையின் தேவா,
            மேவி அடியாரைத் தேவா,-பல
            வெவ்வினையினின்றும் கா, வா;
            பாவிகள் நாங்கள் ஏவையின் மக்களே,
            பக் ஷமே, பரம பொக் ஷமே,
            பாடும்புகழ் நாடும்பரி
            வோடும் தயை நீடும்பரா! - ஆரண
- வே. சாஸ்திரியார்



[1] ஒழுங்கு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு