விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்


விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்

226. (195) பங்காளா                                       ஆதி தாளம்

பல்லவி
            விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்;-மெய்
            விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.

சரணங்கள்

1.         நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்;-முழு
            விஷமான பாவத்தினால் இறந்தோர். - விசு

2.         உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை;-நரர்
            செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. - விசு

3.         பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்;-எச்
            சாபம் அழிவினுக்கும் தகைமை யுற்றோம். - விசு
           
4.         தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்;-அவர்
            மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். - விசு

5.         நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும்?-அவன்
            பாதகம் பழிமரணம், யாவுமே போகும். - விசு

6.         தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான்;-தீய
            பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான். - விசு

- ஞா. சாமுவேல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு