16 April 2019

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் மெய்

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் மெய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்

 

226. (195) பங்காளா                                       ஆதி தாளம்

 

                             பல்லவி

 

          விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்;-மெய்

            விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.

 

                             சரணங்கள்

 

1.         நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்;-முழு

            விஷமான பாவத்தினால் இறந்தோர். - விசு

 

2.         உய்யும்[1] வகையறியோம்; பெலனேயில்லை;-நரர்[2]

            செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. - விசு

 

3.         பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்;-எச்

            சாபம் அழிவினுக்கும் தகைமை யுற்றோம். - விசு

           

4.         தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்;-அவர்

            மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். - விசு

 

5.         நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும்?-அவன்

            பாதகம் பழிமரணம், யாவுமே போகும். - விசு

 

6.         தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான்;-தீய

            பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான். - விசு

 

 

- ஞா. சாமுவேல்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] பிழைக்கும்

[2] மானிடர்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...