உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்


உச்சித பட்டணம் செல்லுவோம்

283. (344) சங்கராபரணம்                                          ரூபகதாளம்

பல்லவி 
                        உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்;-
                                    விரைந்தோடி நடவடி, உத்தம புத்திரி,-
                        உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்.

அனுபல்லவி
                        நிச்சயமாதவே ரட்சகர் செப்புரை
                        நீணிலம் தோன்றும் முனாடி,-நம்
                        நித்திய பிதாவே ஆயத்தமாய் நாட்டிய
                        நீதியின் பட்டணம், ஆதிபன்[1] கட்டடம்,
                        நிண்ணய மா நகரம்-திடத்திடு
                        உன்னதமே சிகரம்;-நமின் பிரிய
                        நேசர் கிறிஸ்து மேல் பாசம் மிகுத் தவர்
                        நேரே செலும் நவ சாலேம் நகர் என்ற. - உச்சி

சரணங்கள்

1.         சித்தமாய் உச்சித பட்டணம் பற்றியே,
            செப்புகிறாய் எனின் தாயே;-அதில்
            சேர்ந்திடு பிள்ளைகள் வாழ்ந்துறும் பாக்கியம்,
            திட்ட அரிதாம், என் தாயே;-புது
            வித்தக மா நகர் ரத்னப் பளிங்கு
            விளக்கொளி மேவும், நன்றாயே;-அந்த
            விஞ்சையர் பட்டணம் எங்கே இருக்கும்?
            விளிம்பி விரி, என் பேராயே;
            இத்தரை மீதிலோ அத்திரி[2] வானிலோ?
            இட்டமாய் யாம் அதற் கெட்டி நடவமோ?
            எங்கே இருக்கு தம்மா?-கவலை அற்
            றங் கிருப்போமே, சும்மா,-சரி சரி,
            இன்பக் கண்ணாட்டியே, அன்புப் புதல்வியே,
            எங்கிருக்கு தென்றன் தங்கமே, சொல்கிறேன். - உச்சி

2.         உன்னத வானிலிருந் திறங்கும் அவ்வெ
            ருசலேம் பட்டணம் கண்டு,-வெகு
            ஊக்கமுடன் அதைப் பார்க்கப் புறப்பட்டு,
            ஓசன்னாவும் பாடிக் கொண்டு,-அங்கே
            பன்னிரு வாசலும் கண்ணாடி வீதியும்
            பானொளிக் கற்களும் உண்டு,-அந்தப்
            பட்டணம் தேவாட்டுக் குட்டியின் ஆசனம்
            பண்பாக மத்தியில் கொண்டு,
            மின்னும் விளக்குகள், தீவட்டிகள் இல்லை;
            விண்ணில் சூரிய சந்திரரும் இல்லை;
            மெய்ப்பொழு தானவரே-அதன் விளக்
            கெப்பொழுதும் அவரே;-அலங்க்ருத
            மேன்மைப்பிரகாசப் பான்மையின் நீதியர்
            மேனி மினுங்கிடத் தோணி இலங்கிடு. - உச்சி

- ஏசடியான் உபாத்தியாயர்


[1] அரசன்
[2] ஆகாயம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு