ஆத்தும ஆதாயம் செய்குவோமே


ஆத்தும ஆதாயம் செய்குவோமே

269. (275) பியாகு                                          ரூபகதாளம்

பல்லவி

                   ஆத்தும ஆதாயம் செய்குவோமே,-இது
                   ஆண்டவர்க்குப் பிரியம்;-நாமதினால்
                   ஆசீர்வாதம் பெறுவோம்,

அனுபல்லவி

            சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்
            தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில்
            ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்
            அற்புதமான பலனை அடையலாம். - ஆத்தும

சரணங்கள்

1.         பாழுலக முழுவதையும் ஒருவன் சம்
            பாதித்துக் கொண்டாலும்,-ஒரு
            நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
            நஷ்டப்படுத்தி விட்டால்,
            ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே,
            அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,
            ஏழை ரூபங்கொண்டு ஞாலமதில் வந்த
            எம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே. - ஆத்தும

2.         கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
            மட்டில்லா தேவசுதன்-வானை
            விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
            விட்டதும் விந்தைதானே;
            துட்டை யொருத்தியி னாத்துமத்தை மீட்க
            தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
            இட்டமுடன் செய்த இரட்சண்ய வேலையை
            இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே. - ஆத்தும

- யே. ஞானமணி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு