கர்த்தருக்குக் காணிக்கையிதோ


கர்த்தருக்குக் காணிக்கை இதோ!

275. துஜாவந்தி                                                       ஆதிதாளம்

பல்லவி

            கர்த்தருக்குக் காணிக்கையிதோ! தம்மையே தந்த
            கர்த்தருக்குக் காணிக்கை! இதோ!

அனுபல்லவி

                        கர்த்தருக்குக் காணிக்கையாய்ப்
                        பத்திலொன்று நான் கொடுப்பேன்,
                        சத்தியக் கிறிஸ்து நாதர்
                        சபையை வர்த்திக்கவேணும். - கர்த்தருக்கு

சரணங்கள்

1.         அநியாயம் நீங்க வேணும்,-உலகிலே மெய்
            அறிவு வளர வேணும்,
            தனியேக மெய்த்தேவனை-நற்தேசத்தில்
            சகலரும் போற்ற வேணும்,

                        கனிவாய்ப் போதகர் வேதம்
                        கற்றறிந்து சொல்லவேணும்,
                        கணக்காய் இதன் செலவு
                        கட்டி வரவேணும், அய்யா! - கர்த்தருக்கு

2.         ஆபிரகாம் பத்திலொன்றையே-மெல்கிசே தேக்குக்-கு
            அனைத்திலும் தந்ததையே!
            மா பிரியமாக வாசித்தேன்,-இஸ்ரயேல் பெத்தேல்
            வள்ளற்குச் செய்பொருத்தனையே,

                        ஆண்டவர் பரன் அவர்கட்
                        கனைத்தும் ஆசீர்வதித்துத்
                        தாபரம்த மதடி கீழ்த்
                        தத்தளித்த தெல்லாங் கேட்டேன். - கர்த்தருக்கு

3.         கொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்தேன்-இதோ! இத்தனை
            கூடினதைக் கொண்டிதோ வந்தேன்,
            நஞ்சைவிளைவினி லோர்பாகம்-சேர்த்து வைத்தேனான்,
            நாலாவகை வரத்திற் கொஞ்சம்,

                        புஞ்சை பல போகத்திலும்
                        போட்டு வைத்தே னான்குறுணி
                        புத்தகக் கணக்கில் கண்ட
                        தித்தனைத் தொகையுமாச்சு. - கர்த்தருக்கு

- ம.ப. அருளப்பன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு