அன்பிலே பூரணரே - எங்கள்


பல்லவி

                   அன்பிலே பூரணரே - எங்கள்
                        ஆனந்த ரூபா அதிசய ராஜா

அனுபல்லவி

            அழகில் சிறந்தோனே - எங்கள்
            ஆசையின் கோமானே
            ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
            அந்நியராம் ஏமை அழைத்தணைத்தீரே - அன்பிலே

சரணங்கள்

1.         காத்தீரே கருணையுடன் - எம்
            கலக்கங்கள் நீக்கிக் கனிவுடன் தூக்கிக்
            கதியில்லா ஏழைகளின் - பெரும்
            கவலைகளைப் போக்கி
            ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
            ஆறுதலளித்தீர் அனுதினம் துதிப்பேன்             - அன்பிலே

2.         ஆனந்தம் ஆனந்தமே உம்
            ஆருயிர் ஈந்திர் அவனியில் வந்தீர்
            அலகைதனை வென்றீர் அவன்
            அடிமைகளை மீட்டீர்
            ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
            அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடுவோம்           - அன்பிலே

3.         கோடையில் குளிர்தருவே - கடும்
            வாடையின் மறைவே ஏழையின் உறவே
            கூடுவோம் திருப்பாதம் - தினம்
            பாடுவோரும் அவர் கீதம்
            ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
            அன்பே, இன்பமே, அன்னையின் மேலாய்          - அன்பிலே

4.         நித்திய பரிசுத்தரே - உம்
            வருகையில் அடியாரைப் பரிசுத்ம் செய்யும்
            உத்தம ஜீவிகளாய் நல்
            நித்திய வாழ்வினிலே
            ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
            அல்லேலூயா கீதம் பாடி மகிழ்வோம்                 - அன்பிலே

5.         தோத்திரம் துதியுமக்கே - தேவ
            அன்பின் ஆழம் அறிந்து புகழ்வோம்
            ஆயத்தமுள்ளோர்க்கே நீர்
            அருணோதயமாவீர்
            ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
            அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடுவோம்           - அன்பிலே

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே