அன்பிலே பூரணரே - எங்கள்
பல்லவி
அன்பிலே
பூரணரே - எங்கள்
ஆனந்த ரூபா அதிசய ராஜா
அனுபல்லவி
அழகில் சிறந்தோனே - எங்கள்
ஆசையின் கோமானே
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அந்நியராம் ஏமை அழைத்தணைத்தீரே - அன்பிலே
சரணங்கள்
1. காத்தீரே கருணையுடன் - எம்
கலக்கங்கள் நீக்கிக் கனிவுடன் தூக்கிக்
கதியில்லா ஏழைகளின் - பெரும்
கவலைகளைப் போக்கி
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
ஆறுதலளித்தீர் அனுதினம் துதிப்பேன் - அன்பிலே
2. ஆனந்தம் ஆனந்தமே உம்
ஆருயிர் ஈந்திர் அவனியில் வந்தீர்
அலகைதனை வென்றீர் அவன்
அடிமைகளை மீட்டீர்
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடுவோம் - அன்பிலே
3. கோடையில் குளிர்தருவே - கடும்
வாடையின் மறைவே ஏழையின் உறவே
கூடுவோம் திருப்பாதம் - தினம்
பாடுவோரும் அவர் கீதம்
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அன்பே, இன்பமே, அன்னையின் மேலாய் - அன்பிலே
4. நித்திய பரிசுத்தரே - உம்
வருகையில் அடியாரைப் பரிசுத்ம் செய்யும்
உத்தம ஜீவிகளாய் நல்
நித்திய வாழ்வினிலே
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அல்லேலூயா கீதம் பாடி மகிழ்வோம் - அன்பிலே
5. தோத்திரம் துதியுமக்கே - தேவ
அன்பின் ஆழம் அறிந்து புகழ்வோம்
ஆயத்தமுள்ளோர்க்கே நீர்
அருணோதயமாவீர்
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடுவோம் - அன்பிலே
Comments
Post a Comment