அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ!


                   அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ! என்னை
                        அழைத்தீரரசே அருளாலே

சரணங்கள்

1.         நாறிக்கிடந்த என் நாற்றத்தை நீக்கியதும் கிருபை
            நாசணுமாகாமல் பாதுகாத்தணைத்து
            மந்தையில் சேர்த்துக் கொண்டீரே                    - அன்பிதோ

2.         சுத்த ஜலத்தினால் சுத்திகரித்தீர் என்னை தமக்காய்
            மீறிப்போகும் எந்தன் சிந்தை அகற்றி தம்
            சித்தத்தைச் செய்யச் செய்தீரே                         - அன்பிதோ

3.         ஆவியீந்து எந்தன் காயம் தம் பரிசுத்தாலயமாம்
            ஆதி தேவன் என்னைச் சொந்தமாக்கிக் கொண்டார்
            என்னை பேரின்பமெனக்கே                               - அன்பிதோ

4.         தூய ஜீவியம் இப்பூலோகத்தில் யானும் நடத்த
            தூய கீதமுடன் துயருடன் பாட
            ஏழைக்கும் கிருபை செய்தீரே!                          - அன்பிதோ

5.         உம்மைச் சந்தித்திட தூய உம் சாயலெனக்கருளும்
            உன்னதங்களிலே என்றும் உம்மோடொன்றாய்
            தங்கிடத் தயவருளும்                                      - அன்பிதோ

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு