ஆதி மெய்தேவனே உம் அன்பிற்கோர்


பல்லவி

                   ஆதி மெய்தேவனே உம் அன்பிற்கோர் எல்லையுண்டோ
                        நீதியாம் ஜோதி அனாதி தேவனே - உம்
                        நீதிக்கோர் எல்லையுண்டோ - இயேசு

சரணங்கள்

1.         எத்தனையோ பாவங்கள் அத்தனே அகற்றினீர்
            பத்திலோர் பங்கு போதா தென்றெண்ணி - நான்
            தத்தம் செய்தேன் உமக்கே                               - ஆதி

2.         எத்தன் எனக்காக - இன்னுயிர் கொடுத்தீரே
            எதைச் செலுத்துவேன் இயேசுவின் அன்பிற்கு
            இதயம் ஈடாகுமோ?                                          - ஆதி

3.         ஆழ்ந்த கடலில் அமிழ்ந்து போன என்னைத்
            தூக்கி எடுத்த உம் அன்பை நினைக்க என்
            என் துதிகள் தான் போதுமோ?                          - ஆதி

4.         பாவத்தில் மாண்ட என்னைக் கோபத்தால் அழிக்காமல்
            இரட்சித்த உந்தன் அன்பை நினைத்து - நான்
            பட்சமாய் போற்றிடுவேன்                                   - ஆதி

5.         அலையும் புயலுமாய் அமிழ்த்தி வீழ்த்துகையில்
            நான்தான் பயப்படாதிருங்கள் என்று உம்
            அன்பின் தொனி கேட்குதே                              - ஆதி

6.         கெத்சமெனே பூங்காவில் பட்சமாய் வேண்டி நிற்கும்
            இரத்த வியர்வையில் வேதனை தரும் உம்
            சத்தம் தொனித்திடுதே                                    - ஆதி

7.         எண்ணும் நன்மை எதுவும் எண்ணிலே இல்லை ஐயா
            பின்னே ஏன் என்னை நேசித்தீரோ
            என்னில் கொண்ட உம் அன்புதானோ                - ஆதி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு