கல்லறைக் காவலில் காயமுடன்


                   கல்லறைக் காவலில் காயமுடன்
                        கடும் அசுத்தாவி பிடித்தோனவன்
                        கனிவுடன் இயேசுவைப் பணிந்து நின்றான்

1.         விலங் கொடிக்கும் கொடும் லேகியோனவன் - இனி
            வேதனை வேண்டாமென்றான்
            விரட்டும் எம்மை பன்றிகளுள் என்றன் பேய்களுமே                    - கல்லறை

2.         கட்டளை பெற்று பன்றிக் கூட்டத்துள் செல்ல - அவை
            கடலினில் மாய்ந்தனவே
            கரைதனில் பேய் பிடித்தோன் சுகமடைந்தான் உடனே             - கல்லறை

3.         அதிசய நோய் பேய்களெல்லாம் இயேசு
            நாதனைக் கண்டோடும்
            அவரையே நீ நம்புவாயானால் ஆதரிப்பார் உன்னையே             - கல்லறை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு