வளர்ந்தே பெருகுக என்றே - உளம்


1.       வளர்ந்தே பெருகுக என்றே - உளம்
            மகிழ்ந்தே புகழ்ந்திட வாரீர்
            தளர்ந்தே சோர்வுறும் கால்களே - பலம்
            அடைந்தே நடந்திட வாரீர்

பல்லவி

                        பெருகுவோம் - வளர்ந்து
                        பெருகுவோம் - தேவன்
                        அருளும் ஆவியின்
                        அருமையாம் ஒளியில் - வளர்ந்தே பெருகுவோம்

2.         இருநூறாண்டுகள் இறைவன் - நெல்லைத்
            திருச்சபை வளர்ந்திட நேர்ந்தார்
            வரும்பல ஆண்டுகள் எல்லாம் - இன்னும்
            பெருகிட அருள்வரம் ஈவார்

3.         பிரிவினை எழுந்திடும் நேரம் - நம்மைக்
            கரிசனை யோடவர் இணைத்தார்
            உரிமையாய் ஒருமையில் வளர - அவர்
            பரிவுடன் தினம் நடத்திடுவார்

4.         தூய்மையில் தவறிய வேளை - நம்மைத்
            தூயவர் தூக்கியே எடுத்தார்
            தாய்மையின் கரம் கொண்டு மேலும் - நம்மைத்
            தாங்கியே தினம் அணைத்திடுவார்

5.         ஒளியென உலகினில் வந்தார் - நம்மை
            ஒளியென விளங்கிட அழைத்தார்
            ஒளிதரும் தீபங்களாக - என்றும்
            ஒளிர்ந்திட ஓடியே வாரீர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு