ஆகா என்ன இன்பம் பரலோக இன்பம்


பல்லவி

                   ஆகா என்ன இன்பம் பரலோக இன்பம்
                        இன்ப இயேசு அளித்தனரே
                        அளவிற்கடங்கா புத்திக்கும் எட்டிடா!
                        அன்பை கூற நாவும் போதுமோ

சரணங்கள்

1.         நீசத்துரோகி எந்தனை - பாசமாய் ஏற்றீரோ நீர்
            பாவ உளையினின்றே - தூக்கி எடுத்தீரோ நீர்              - ஆகா

2.         நாசபுரி நோக்கியே - விரைந்து சென்ற என்னை
            பாசம் வைத்தேன் உந்தனில் என்று கூவி அழைத்தீரே நீர்        - ஆகா

3.         நெரிந்த நாணல் என்னை முறித்திடும் தருணம்
            பரிந்து பேசி அன்பால் - நிலையாய் நிறுத்தினீரே          - ஆகா

4.         எச்சரிப்பின் சத்தத்தை - தள்ளி விட்டபோதிலும்
            அன்பின் சவுக்கடியால் - சேர்த்தன்பாய் ஆதரித்தீர்      - ஆகா

5.         காரிருள் சூழும் வேளை - கலங்கித் தவிக்கையில்
            காத்து நீர் என்னைத் தேற்றிக் - கருத்தாய் ஆதரித்தீர்            - ஆகா

6.         பிராணநாதா உந்தனை என்று நான் கண்டிடுவேன்
            ஆருயிர் நேசா உம்மை காண ஆசை பொங்குதே         - ஆகா

7.         அழைப்பின் சத்தம் கேட்க - நாட்கள் அதிகமாமோ
            நேசர் மார்ப்பில் சாய்திட - வாஞ்சை பெருகிடுதே         - ஆகா

8.         ஆகாய மேகந்தனில் சேர்ந்திடும் நேரந்தனில்
            ஆனந்தம் ஆனந்தமே - என்றென்றும் ஆனந்தமே        - ஆகா

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு