உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே


பல்லவி

                   உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
                        உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா
                        உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

சரணங்கள்

1.         பரிசுத்தமே பரவசமே
            பரனேசருளே வரம் பொருளே
            தேடினதால் கண்டடைந்தேன்
            பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர்               - உம்பாதம்

2.         புது எண்ணெய்யால் புது பெலத்தால்
            புதிய கிருபை புது கவியால்
            நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
            நூதன சாலேமில் சேர்த்திடுவீர்              - உம்பாதம்

3.         நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
            நெருங்கி உதவி எனக்களித்தீர்
            திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
            தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் - உம்பாதம்

4.         என் முன் செல்லும் உம் சமூகம்
            எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
            உமது கோலும் உம் தடியும்
            உண்மையாய் என்னையும் தேற்றிடுதே  - உம்பாதம்

5.         கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
            கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
            கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
            கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர்           - உம்பாதம்

6.         என் இதய தெய்வமே நீர்
            எனது இறைவா ஆருயிரே
            நேசிக்கிறேன் இயேசுவே உம்
            நேசமுகம் என்று கண்டிடுவேன்             - உம்பாதம்

7.         சீருடனே பேருடனே
            சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
            சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
            சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன்                  - உம்பாதம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு