என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
என்னை
நேசிக்கின்றாயா?
கல்வாரிக்
காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல்
இருப்பாயா?
சரணங்கள்
1. பாவத்தின்
அகோரத்தைப் பார்
பாதகத்தின்
முடிவினைப் பார்
பரிகாசச்
சின்னமாய் சிலுவையிலே
பலியானேன்
பாவி உனக்காய் - என்னை
2. பாவம்
பாரா பரிசுத்தர் நான்
பாவி
உன்னை அழைக்கின்றேன் பார்
உன்
பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்
பாதம்
தன்னில் இளைப்பாற வா - என்னை
3. வானம்
பூமி படைத்திருந்தும்
வாடினேன்
உன்னை இழந்ததினால்
தேடி
இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவே
ஓடி
வந்தேன் மானிடனாய் - என்னை
Comments
Post a Comment