எந்தன் இயேசு உன்னதத்தில் அன்புள்ளோராய்


1.       எந்தன் இயேசு உன்னதத்தில் அன்புள்ளோராய் வாழும்போது
            ஏழையேன் கலங்குகின்றேன் இப்பூமியில் - அதால்
            என்றுமவர் கிருபை மட்டும் போதுமே

2.         இன்னல்களாம் குன்றுதனில் பின்னிடாமல் ஏறுதற்கு
            இயேசு தன் கால் தன்னை மான் கால்போலாக்கி - என்னை
            இன்பமான யென் பாதையோடச் செய்குவார்

3.         ஆரும் துணை இல்லை என்றோ ஏகனாய் நான் ஆனேன் என்றோ
            என் மனதில் எண்ணிடேன் ஓர் நாளுமே - இயேசு
            என்னுடனில்லாமல் எங்கு போயினர்

4.         என்னருமைத் தோழரன்றோ தெய்வ தூத சங்கமெல்லாம்
            இப்போதவர் என் பிதாமுன் நிற்கிறார்
            என்னையும் தம் ஊழியத்தால் தேற்றுவார்

5.         வியாகுலம் என் வீட்டை விட்டுக் காட்டிலோடப் பண்ணினும்
            அங்கேயொரு தூதன் என்னைச் சந்தித்து - சூடாம்
            அப்பமும் ஜலமும் தந்து தேற்றுவான்

6.         வரும் நாளுக்காக வீணாய் என் மனம் நொந்தென்ன புண்ணியம்
            என்னைத் தினம் போஷிப்பவரில்லையோ இன்னும்
            ஏழையென் அவரை மட்டும் நம்புவேன்

7.         கவனிப்பாய் காகத்தை நீ விதைப்பு உண்டோ? அறுப்பு உண்டோ?
            விலையின்றிப் போற்றவில்லையோ நாதன் - லீலிப்
            புஷ்பங்களில் வண்மையைத்தான் வைத்ததார்

8.         பத்முதீவில் ஏகனாய் நான் தங்கிவிடினும் பயப்படேன்
            வானந்திறந் தேசுநாதர் ஜோதியாய் - எனைப்
            பரதீசில் ஆவிக்குள் எடுப்பாரே

9.         ஹா மகேசா! கருணேசா! பொன்னுநாதா! நீரெனக்காய்
            வேண்டியதெல்லாம் தயவாய்த் தந்தால் - நான் என்
            வாணாளெல்லாம் உம்மைப் போற்றிப் பாடுவேன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு