நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
மிகவும் அதிகமாய்
கிரியை செய்திட வல்லவரே
உமக்கே மகிமை
1. அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை
ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர் - 2
மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் - 2
- நான்
2. ஞானம் கேட்டார் சாலொமோன் ராஜா
செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்
- 2
மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய்
- 2 - நான்
3. வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலை
வந்தது உயர்வு ஆளுநர் பதவி - 2
எகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே - 2
- நான்
4. கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்
வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக்கொண்டீரே -
2
ஓடி அணைத்து பாடி மகிழ்ந்தீர் - 2 - நான்
- பெர்க்மான்ஸ்
Comments
Post a Comment