பாவம் போக்கும் ஜீவநதியைப்
156. இராகம்: செஞ்சுருட்டி பிலந்திதாளம்
பல்லவி
பாவம்
போக்கும் ஜீவ நதியைப்
பாரீர்
வந்து பாராய்-பாவி?
அனுபல்லவி
தீவினை தீர்க்கும் தேவ மறியின்[1]
திருரத்த
மிந்த ஆறாம்,-பாவி? - பாவம்
சரணங்கள்
1. கல்வாரி மலைச்சிகர
மீதுற்றுக்
கண்கள்[2] ஐந்து
திறந்து;-அதோ
மல்கிச் சிலுவை
யடியில் விழுந்து
வழிந்தோடுது
பாராய்,-பாவி - பாவம்
2. பாவச்சுமையால்
நொந்து சோர்ந்து
பதறிவிழுந்
தலறி-நிதம்
கூவியழுத அனந்தம்[3] பேரிதில்
குளித்தே யுளங் களித்தார்,-பாவி - பாவம்
3. பத்தருளத்தி லிடைவிடாமல்
பாய்ந்து வளமீந்து-அதை
நித்தமும் பரிசுத்த குணத்தில்
நிலைநாட்டுது
பாராய்-பாவி - பாவம்
4. ஒருதரம் இந்த நதியின்
தீர்த்தம்
உண்டோர்? ஜீவன்
கண்டோர்-தாகம்
அறுதி[4] யடைவர்; வேறொரு நதிக்
கலையார், தேடி
யலையார்,-பாவி - பாவம்
5. முன்பின் ஒன்றையும் யோசியாமல்
முழுகாயோ நீ,
பாவி? இந்த
அன்பின் நதியில் விசுவாசம் வைத்தால்
அதுவே போதும்; பாவி-ஆ!-ஆ - பாவம்
6. நித்தியந்தனில்
கலந்துறையுஞ் செந்
நீரார்[5] நதியிதிலே-தங்கள்
வஸ்திரந் தோய்த்த
சுத்தர் சபையில்
வாழ்ந்து கீதம் பாடாய்-பாவி?
- பாவம்
- அருள்திரு. ஜி.சே. வேதநாயகம்
Comments
Post a Comment