பல்லவி
பாவி
ஏசுனைத் தானே தேடித் துயர்மேவினார்
இதைத்
தியானியே.
சரணங்கள்
1. பரம சீயோன் மலைக்கரசர்
நற்பாலன்
பரிசுத்த தூதர் பணி செய்யும் பொற்பாதன்
மானிடனாக அவதரித்த
தெய்வீகன்
வல்ல பேயை ஜெயித்த மா மனுவேலன். - பாவி
2. தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய
தேவ கோபாக்கினி
அவர் மீதில் பெய்ய
தோஷம் சுமந்து
யேசு தேவாட்டுக் குட்டி
துன்பக் கடலில் அமிழ்ந்
தாற்றுதல் செய்ய. - பாவி
3. இந்தப் பாத்திரம் என்னை விட்டகலாதோ?
இல்லையானால்
உமது இஷ்டமதென்றே
சிந்தை துயரடையச் செப்பினார்,
அன்றோ
சுவாமி உனக்காய் பிணைப்பட்டதால்,
அந்தோ! - பாவி
4. கெத்சமனேயில் ஏசு பட்டதை நினையே;
கேவலமான உன்தன்
பாவத்தை மறவே;
ஆத்தும நேசர் பதம் ஆவலாய் பணியே;
அன்பின் கரத்தாலுனை
அணைப்பார், நிச்சயமே. - பாவி
- தேவசகாயம்
உபாத்தியாயர்
No comments:
Post a Comment