பாவியே உனைத்தானே தேடித் துயர் மேவினார்

பாவியே உனைத்தானே தேடித் துயர் மேவினார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

412. இராகம்: அம்சதோனி.                                                                                              தாளம்: ஆதி.

 

                             பல்லவி

 

                   பாவியே உனைத்தானே தேடித் துயர் மேவினார்;

 

                             சரணங்கள்

 

1.         பரம சீயோன் மலைக் கரசர் நற்பாலன்,

            பரிசுத்த தூதர் பணிசெய்யும் பொற்பாதன்,

            மானிடனாக அவ தரித்த தெய்வீகன்,

            வல்ல பேயைச் செயித்த மா மனுவேலன். - பாவியே

 

2.         தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய,

            தேவ கோபாக்கினி அவர்மீதில் பெய்ய,

            தோசம் சுமந்து இயேசு தேவாட்டுக் குட்டி

            துன்பக் கடலில் அமிழ்ந் தாற்றுதல் செய்ய - பாவியே

 

3.         இந்தப் பாத்திரம் என்னை விட்டக லாதோ?

            இல்லையானால் உமது இட்டம் தென்றே

            சிந்தை துயரடையச் செப்பினார் அன்றோ

            சுவாமி உனக்காய்ப் பிணைப்பட்டதால், அந்தோ! - பாவியே

 

4.         கெத்செ மனேயில் இயேசு பட்டதை நினையே;

            கேவலமான உன்தன் பாவத்தை மறவே;

            ஆத்தும நேசர் பாதம் ஆவலாய்ப் பணியே;

            அன்பின் கரத்தா லுனை அணைப்பார், நிச்சயமே. - பாவியே

 

 

­- திரு. தேவசகாயம் உபாத்தியார், சாட்சியாபுரம்.

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே