ஏசாயா தீர்க்கன் ஓரு நாள் தரிசனம்
கண்டான்
தேவமைந்தன் கன்னிமரியின் மடியில் தோன்றுவார்
- 2
1. கடுங்குளிரில்
மேய்ப்பர் மந்தை காத்து நிற்கையில்
தேவதூதர்
வானில் தோன்றி வாழ்த்துக் கூறினார் - 2
எல்லா
ஜனத்திற்கும் மிகுந்த சந்தோசம் தரும்
நற்செய்தியை
கூற இங்கு வந்து நின்றாரே - 2 - ஏசாயா
2. தாவீதின்
குமாரன் இயேசு பெத்லகேமிலே
மாட்டுத்
தொழுவில் ஏழ்மையாக அவதரித்தாரே - 2
கர்த்தராகிய
கிறிஸ்து உலக இரட்சகர்
பாலனாக
உன்னில் தோன்ற இடம் தருவாயா? - 2 - ஏசாயா
3. பாவத்திலே
மாண்டு போகும் மண்ணின் மைந்தர்க்காய்
விண்ணின்
வேந்தன் தன்னை இன்று உலகில் தந்தாரே - 2
சிலுவை
மரத்திலே மரித்து ஜீவன் ஈந்தாரே
உயிர்த்தெழுந்த
இயேசுவை நீ இன்றே ஏற்றுக்கொள் - 2 - ஏசாயா
- Prince Wilson, Nazareth
No comments:
Post a Comment