163. இராகம்: கமாசு அடதாளசாப்பு
பல்லவி
வா; பாவி கர்த்தரின் அண்டைக்கு வா,
சரணங்கள்
1. பாவியே, இன்னும் பயமின்றிப்
பாவத்தில்
நிலைத்திருக்காதே;
இப்போ
தாவியே ஜோதியருன்னை அழைக்கிறார்
தாமதஞ் செய்யாதே
- வா
2. பாவநாசர் உனக்கென்று
சிந்தின
ரத்தம் அதோ பாராய்?-உல
காசையை விட்டகன் றேசுவின்
பந்தியில் இக்ஷணமே
சேராய்? - வா
3. ஆபத்துக்குந்த
தேவ கோபத்துக்குந்
தப்பத் தீவிரமாயோடி
வா;-உன்
பாவத்தின் சாபத்தை நீக்க வந்த
பரிசுத்தரின் அண்டைக்கு
வா - வா
4. காலத்தை வீணாய்க்
கழித்துவிட்டால்
இனி யெப்போ
குணப்படுவாய்?-நீ
ஜாலம் பண்ணித் தேவ சாபத்தை
தேடாமல் இப்போ குணப்படுவாய்
- வா
- அருளானந்தம்
பிரசங்கியார்
No comments:
Post a Comment