விண்ணுலகம் போற்றும் எந்தன் மன்னன் இயேசுவே
மண்ணுலகம்
வந்துதித்தார் எந்தன் சிலாக்கியமே - 2
ஏழை குடில்
மாறவே
வறுமை
வியாதி நீங்கவே
பூவுலகில்
வந்துதித்தார் எங்கள் தேவபாலனே - 2
பல்லவி
போற்றிப்
பாடிடு உயர்த்தி மகிழ்ந்திடு
விண்ணைவிட்டு
மண்ணில் வந்தார் என்று சொல்லிடு - 2
துரோகம்
செய்து தூரம் வாழ்ந்த இந்த துரோகியை
மீட்டிடவே
அவதரித்தார் இந்த உலகிலே - 2 - விண்ணுலகம்
சரணம்
1. இம்மானுவேலர்
தேவன் நம்மோடு
என்றும்
வாழ்வதால் கவலை இல்லையே - 2
பாவங்கள்
சாபங்கள் இனி என்றும் இல்லையே
பரலோக
மகிமையே என் சொந்தமானது
உளம்மானந்த
கீதங்களால் பாடுதே - (2) - போற்றிப்
2. வார்த்தையானவர்
வல்லமை உள்ளவர்
ஆயிரம்
பதினாயிரகளில் என்றும் சிறந்தவர் - 2
உள்ளங்கள்
நிரம்பிட மறுரூபம் அடைந்திட
உன்னத
ஆவியால் புது பெலன் பெற்றிட
என்னை
அன்பாலே ஆளும் என் மணவாளனே - (2) - போற்றிப்
- Pas. J. John Israel
No comments:
Post a Comment