164. இராகம்: உசேனி ஆதிதாளம் (427)
பல்லவி
வாரும், மனந்திரும்பி வாரும்; கிறிஸ்துவிடம்
சேரும்; திடமுடனே
சேரும்.
அனுபல்லவி
ஆரும் வரலாம்,
நித்திய பேறும் பெறலாம்; வந்தோர்
ஆரையும் தள்ளிவிட்டார்;
தாராளமா யெளியோர், - வா
சரணங்கள்
1. தெருக்கடோறு மலைந்த[1] தீயர்க்கு மிடமுண்டு;
சிதறி வேலி கடோறும்
திரிந்தோரையும் பண்டு
உருக்கமுட னழைத்த திருக்கருணையுங் கண்டு
உள்ளநோய் துயரோடு மெள்ளத் தள்ளாடிக் கொண்டு
- வா
2. தாழ்வோடழுது தியங்கும் நிர்ப்பந்தமும்
தம்பவச் சேனையால் தத்தளித்தோர் ஆரும்,
நாளும் வருங்
கோபாக்கினைக்கு வெருவினோரும்[2],
நானே பாவியென்றோரும்
நடுநடுங்கின பேரும்; - வா
3. பதினோராம் தாசில்[3] வந்தாலும்
உதறித் தள்ளார்
பரிதாபம் அன்பிரக்கம்
திரு உள்ளத்திலுள்ளார்;
கதித்த மோட்சத்திற் பங்கு கள்ளனுக் கீந்த நல்லார்
கனிந்து வருவோர் தம்மைச் சினந்து நில்லென்று சொல்லார் - வா
No comments:
Post a Comment