வாருங்க என் நேசரே
வயல் வெளிக்குப் போவோம்
அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை
உமக்கு கனியாய் கொடுப்பேன்
1. ஆராதனையில் கலந்து கொள்வேன்
அபிஷேகத்தால்
நிறைந்திடுவேன்
உம்மை துதித்து துதித்து
தினம் பாடி பாடி தினம் நடனமாடி மகிழ்வேன்
2. நேசத்தால் சோகமானேன்
உம் பாசத்தால் நெகிழ்ந்து போனேன்
உம் அன்பு கடலிலே தினமும் மூழ்கியே
நீந்தி நீந்தி மகிழ்வேன்
3. நீர் செய்த நன்மைகட்காய்
என்ன நான் செலுத்திடுவேன்
ரட்சிப்பின் பாத்திரத்தை
என் கையில் ஏந்தி ரட்சகா
உம்மைத் தொழுவேன்
YouTube Link
No comments:
Post a Comment