இயேசு பிறந்த இந்நாள்
உலகில்
வெளிச்சம் உதித்த நன்னாள்
பார்
எங்கும் உள்ள யாவருக்கும்
மீட்பு
கிடைத்த பொன் நாள் - 2
1. ஏழை கோலமாக
மாட்டு தொழுவில்
வந்து விட்டார்
வழியும், சத்தியமும்,
ஜீவனும் நானே
என்று கூறினாரே
- 2
வானத்தின்
கீழ், பூமியின் மேல்
மனிதருக்குள்
இயேசுவல்லால்
வேறு
நாமம் இல்லை - 2
2. கோடி கோடியாக
இன்னும் இயேசுவை
காணவில்லை
தூங்கும் விசுவாசியே
உன் பொறுப்பினை
உணர்ந்திடுவாய் - 2
கிறிஸ்துவனே நீ உணர்ந்திடுவாய்
விழித்திடுவாய், எழும்பிடுவாய்
இதுவே
தருணம் - 2
No comments:
Post a Comment