இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து
ஒளிருது
காலம்
கனிந்த காலையில் கடவுள் தந்த கொடையிது
1. மணமில்லாத
மலரை போல்
இசையில்லாத
பறவைப் போல் (2)
அருளில்லாத
பாருலகம் அடைந்த துயரம் மாறவே – 2
2. துள்ளி
மகிழும் குழந்தையே
உள்ளம்
கொள்ளை கொண்டதே (2)
உந்தன்
அன்பின் வரவிலே
விண்ணும்
மண்ணும் இணைந்ததே – 2
தொழுவில்
தவழும் பாசமே கடவுள் தந்த திருமொழி - 2
சிந்தை
குளிரும் பூமுகமே உலகை ஒளிரச் செய்யுமே - 2
No comments:
Post a Comment