வாரும்
என் நேசரே நேசத்தின் உச்சிதம்
தாருமே எந்தனுக்காய்
1. உளையான சேற்றினில் தூக்கி எடுத்தீரே
இரத்தத்தால் கழுவினீரே
மார்போடணைத்தீர்
மகனாக ஏற்றீர்
மன்னவா உன் தயவே
2. இருள் சூழ்ந்த வேளையில் தீபமாய் வந்ததீரே
மகிமையாய் மாற்றினீரே
உம் சாயலில் நான் மறுரூபமாகிட
எத்தனை அன்பு வைத்தீர்
3. விண்ணை மறந்து வழி தப்பி திரிந்து
மனம் போல வாழ்ந்தேனய்யோ
செங்குருதி சிந்தி எனக்காக ஊற்றுண்டீர்
உள்ளம் உருகிடுதே
No comments:
Post a Comment